
சப்தங்களில் தொலைகிறீர்கள்
நீங்கள் ....
மௌனத்தில் நிலைக்கிறேன்
நான் ...
சத்தத்தை விட
ஆழமானது மௌனம் ..!
வெளிச்சத்தை மட்டும்
விரும்புகி
றீர்கள் நீங்கள் ...
அதனால்தான்
உங்கள் நிழல்கூட
கருப்பாய் இருக்க்கிறது ....
சாதாரணங்களையும்
சன்னதி என்கிறீர்கள் நீங்கள் ...
சன்னதியையும் சாதாரணம்
என்கிறேன் நான் ...!
வயிரைதாண்டி வாழ்வதில்லை
நீங்கள் ....
உயிரைத்தாண்டியும் வாழ்ந்துகொண்டுள்ளேன்
நான் ...!
வீடுகளுக்கு மட்டுமே
கதவுகள் வைக்றீர்கள்
நீங்கள் ...
எனது பயணத்தின்
கதவுகள் மூடுவதேயில்லை...!
இறுதியாக
வாழ்வதாக நடித்து கொண்டுளிர்கள்
நீங்கள்....
உண்மையாய்
வாழ்ந்து கொண்டுள்ளேன்
நான் ...!